பிரபலங்களிடம் அதிகம் நடக்கும் மணமுறிவு ஏன்?.... உளவியல் நிபுணரின் பார்வையில்

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா 18 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் திடீரென மணமுறிவு செய்துக்கொள்வதாக பரஸ்பரம் இருவரும் அறிவித்துள்ளனர். இது தனுஷ் ரசிகர்கள், ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண முறிவுக்கான காரணங்களாக ஆளாளுக்கு ஹேஷ்யங்களை அடுக்குகின்றனர். பிரபலங்கள் மணமுறிவுக்கான காரணங்களை உளவியல் பார்வையில் அணுக உளவியல் நிபுணர் இளையராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது.

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களில் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு மணந்தார். இருவருக்கும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 18 ஆண்டுகள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சென்ற வாழ்க்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாமனார் ரஜினிகாந்த், மருமகன் தனுஷ் இருவரும் தேசிய அளவில் விருதுகளைப் பெற்றபோது மகிழ்ச்சியாக டெல்லியில் ஒன்றுகூடி கொண்டாடியபோது தெரிந்தது.

ஆனால் நேற்று திடீரென இருவரும் தாங்கள் பிரிவதாக பரஸ்பரம் அறிக்கை மூலம் அறிவித்தனர். "ஐஸ்வர்யாவும் நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்." என்று தெரிவித்திருந்தார். கட்டாயம் அவர்கள் தனி மனித சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அப்படி தலையிட கூடவும் கூடாது.

Click Here to View More Details

Back To Top