My article on hindi

சினிமாவில் மனநோய்கள் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் இளையராஜாவிடம் கேட்டோம்.

''மனநலம் சார்ந்த பாதிப்புகளைக் கதையாக்கும்போது வணிக ரீதியான விஷயங்களைப் புகுத்தாமல் படம் எடுக்கவே முடியாது. திரைப்பட இயக்குநர்களிடம் இந்த மனநோயாளியை ஏன் இப்படிச் சித்தரித்தீர்கள் என்று கேட்டாலும் மிக எளிமையாக கமர்ஷியல் எலமென்ட் வேண்டுமே என்று சொல்லி முடித்துவிடுவார்கள். இல்லை இது கற்பனைக் கதை என்பார்கள்.

முதலில் சினிமாவில் காட்டப்படுவதுபோல், எந்த ஒரு மனநோயாளியாலும் மனச்சிதைவு ஏற்பட்ட நோயாளியாக இருந்தாலும்கூட அவர்களால் திட்டமிட்டு ஒரே பாணியில் கொலைகளை அரங்கேற்ற முடியாது. ஆனால் மனநோயாளிகள் கொலை செய்யவேமாட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. அந்தக் கொலைக்கு எந்த ஒரு காரணமும், பின்னணியும் இருக்காது என்பதே உண்மை. அப்படிப்பட்ட மனச்சிதைவை நாங்கள் 'கேன்சர் ஆஃப் மைண்ட்' என்று கூறுகிறோம்.

மனச்சிதைவு நோயாளிகளை சிகிச்சைக்கு சம்மதிக்க வைப்பதே மிகவும் கடினம். சில நேரங்களில் அவர்களுக்கு மயக்கம் ஏற்படுத்தும் மருந்தை அளித்து மருத்துவமனைக்குக் கொண்டு வருவதும் உண்டு. அவர்களுக்கு சிகிச்சை அளித்த பின்னரே அன்பும் போதனையும் எடுபடும்.

Back To Top